Monday, 20th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
சென்னை: பாஜகவினர் ஒரு நிகழ்ச்சிக்கு கத்தியுடன் நுழைந்திருக்கிறார்கள்.. இந்த சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழக பாஜக தலைவர் முருகன் தலைமையில் சென்னையில் கூட்டம் நடந்து வருகிறது.. இந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த 6 பேரின் நடமாட்டம் சந்தேகத்திற்கிடமாக இருந்தது. இதையடுத்து போலீஸார் அவர்களை பரிசோதித்தபோது அவர்களிடம் கத்தி இருந்தது தெரிய வந்தது.
இவர்கள் எதற்காக கத்தியுடன் வந்தார்கள் என்று தெரியவில்லை. ஒரு மாநில தலைவர் கூட்டத்திலேயே இப்படி ஒரு நிகழ்வா என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த நபர்களைப் போலீஸார் அங்கிருந்து அப்புறப்படுத்த முயன்றபோது போலீஸாருடன் சில பாஜகவினர் வாக்குவாதமும் செய்துள்ளனர்.
இது போலீஸாரை அதிர்ச்சி அடைய வைத்தது. இப்படித்தான், 2 மாதத்துக்கு முன்பு, தஞ்சாவூரில் உள்ள மடத்துக்கு சொந்தமான கடையை காலி செய்ய சொன்ன மேனேஜரை பாஜக நகர தலைவர் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.